Tuesday, August 27, 2013
Monday, August 26, 2013
ஆதார் அடையாள எண் என்றால் என்ன? அந்த எண்ணால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?
ஆதார் அடையாள எண் என்றால் என்ன? அந்த எண்ணால் நமக்கு ஏற்படும் பயன் என்ன? அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற சந்தேகங்கள் நம்மில் பலருக்கு உண்டு. அவைகளை தீர்க்கும் அடிப்படை தகவல்கள் இதோ உங்களுக்காக.
ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது இது குறித்த சந்தேகங்கள், இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது. இதனால் மக்கள் மத்தியில் இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார் எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் கேட்டது புதிய தலைமுறை நாம் கேட்ட கேள்விகளும் அதிகாரிகளின் பதில்களும்
எதற்காக ஆதார் எண் ?
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியோடு இந்த முறை தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. நமது பெயர் மற்றும் விவரங்களை தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் முயற்சியின் இறுதி வடிவம் ஆதார் எண் என்கிற பிரத்யேக அடையாள எண்.
என்ன என்ன விவரங்களை தர வேண்டும் ?
பெயர் ,குடும்பத்தலைவர் உடனான உறவு ,பாலின வகை,பிறந்த தேதி, திருமண நிலை, கல்வித் தகுதி, தொழில், தந்தை ,தாய் ,துணைவரின் முழுப்பெயர்,பிறந்த இடம், நாடு, தற்போதைய முகவரி,தற்போதைய முகவரியில் வசித்து வரும் ஆண்டுகள்,நிரந்தர வசிப்பிட முகவரி என மொத்தம் 14 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்
வேறு தகவல்கள் என்ன ?
ஒவ்வொரு மனிதனின் biometric அடையாளம் எனப்படும் பண்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஒவ்வொருவரின் புகைப்படம், கைவிரல் ரேகைகள், விழி திரையின் பதிவு ஆகியவை அடங்கும் மற்றவர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கும் அடையாளங்கள் பதிவு செய்யப்படும், என்ன குறைபாடு உள்ளதோ அதுவும் பதிவேட்டில் இடம்பெறும்
ஆதார் எண் எப்படி வழங்கப்படும் ?
அனைத்து தகவல்களும் இந்திய அரசின் பிரத்யேக அடையாள எண் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தனிநபருக்கான பிரத்யேக எண் வழங்கப்படும். இந்த எண் குறித்த விபரம் அஞ்சல் வழியாகவோ அல்லது செல்பேசி மூலமாகவோ ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தப்படுத்தப்படும்.
முகாம்கள் எங்கு நடைபெறுகின்றன ?
தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், கிராம ம் என அனைத்து பகுதிகளிலும் ஆதார் எண் தகவல் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது. நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலமாக அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம்
முகாம்களை தவற விட்டவர்கள் என்ன செய்யலாம் ?
தங்கள் பகுதி முகாம்களை தவறவிட்டோர், புதியதாக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ,மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் அக்டோபர் மாதம் அமைக்கப்பட உள்ள நிரந்தர மையங்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம். தகவல்களில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். மேலும் ஆதார் எண் இருந்தால் தான் அனைத்து அரசு சலுகைகளையும் பெற முடியும் என்பன போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்கின்றனர் அதிகாரிகள்.
ஐந்து வயதுக்கு மேல் உள்ள அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவருக்கே ஆதார் எண் வழங்கப்படும்.
Courtesy: Puthiya Thalaimurai
Tuesday, May 28, 2013
MY STAMP SCHEME - INDIAPOST
என் தலை... அஞ்சல் தலை!
அஞ்சல் தலைகளைச் சேமிப்பது சுவாரஸ்யமான கலை. ஒரு நாட்டின் தலைவர்கள், கலாசாரம், பழக்க வழக்கங்கள், வரலாறு போன்றவற்றை அறியவும் தூண்டுகோலாக விளங்குகிறது.
நமது நாட்டின் அஞ்சல்தலைகளை யோசித்துப்பாருங்கள், காந்தி, நேதாஜி, நேரு, இந்திரா காந்தி, அண்ணா என நீண்டு செல்லும் அந்தப் பட்டியலில் உங்கள் படமும் இடம்பெற்றால் எப்படி இருக்கும்?
'மிகப் பெரிய சாதனைகள் செய்தவர்களும் தலைவர்களும் மட்டுமே இடம்பெற்ற அஞ்சல்தலையில் இனி, நமது படமும் அச்சிடப்படும். அதை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழலாம்.
உங்களுடைய படம் மட்டுமல்லாது; நீங்கள் வரைந்த ஓவியங்கள், எடுத்த படங்கள் போன்றவற்றையும் தபால்தலையாக அச்சிட்டு வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பெயர், 'என் அஞ்சல்தலை’(MY STAMP).
எனது அஞ்சல் தலை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறப்பு தபால்தலை சேகரிப்பு மையங்களில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் இருந்து வாடிக்கையாளர்களின் புகைப்படம் ஒட்டிய தபால் தலைகள் தயாரிக்கப்பட்டு அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் தபால் தலை அனுப்பி வைக்கப்படும். இதில் ரூ.300-க்கு 12 அஞ்சல் தலைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, பின்னர் இதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால்நிலையங்களில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு, ஜம்மு, புனே, கோழிக்கோடு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இது படிப்படியாக மற்ற ஊர்களிலும் செயல்படுத்தப்படும் என இந்திய அஞ்சல் துறை அறிவித்து இருக்கிறது. மே 3-ம் தேதி சென்னையில் இந்தத் திட்டம் அறிமுகமானது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, போலந்து போன்ற பல நாடுகளில் பல ஆண்டுகளாகவே இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
நமது படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகளால் என்ன பயன்?
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் தனிநபர் கடிதப் போக்கு வரத்துகள் குறைந்துவிட்டன. இந்தத் திட்டம் கடிதப் போக்குவரத்துகளை ஊக்குவிக்கும். உங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ அனுப்பும் கடிதத்தில் உங்கள் படம் அச்சிடப்பட்ட அஞ்சல்தலை ஒட்டப் பட்டு இருந்தால், அதைப் பார்ப்பவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?
நீங்கள் அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கம்கொண்டவராக இருந்தால், உங்களுடைய ஆல்பத்தில் உங்கள் முகம்கொண்ட அஞ்சல்தலையும் இருக்கும். உங்கள் நண்பர்களின் சேமிப்பிலும் இடம்பெறலாம்.
ஃபேமிலி ட்ரீ எனப்படும் குடும்ப வரைபடம் தயாரிக்கும்போது, உங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் படங்களும் அச்சிடப்பட்ட அஞ்சல்தலைகளை அதில் ஒட்டி அசத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-2854 3199 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, என் அஞ்சல் தலை திட்ட தகவல்களை பெறலாம்.
Courtesy: Vikatan
|
Tuesday, May 7, 2013
National Child Award for exceptional achievement
INDIA POST
FROM
Supdt of Post Offices
Pudukkottai Division
Pudukkottai-622001
|
TO
The Postmaster Pudukkottai/All SPMs in Pudukkottai Division
(B.Os may be informed through B.O slip).ASP/IPS in Pudukkottai Division.
|
CPT/WLF/ 01-13/13-14 dated at Pudukkottai
-622001 the 3.05.2013.
Sub: National Child Award for
exceptional achievement for the
year 2013-14-reg
Ref: R.O letter WLF/331-01/2012/TR dated 01.05.2013.
A gist of copy of the joint secretary,Ministry of Women and child
development letter no 11-3/2012-CW-1 dated 01.04.13 communicated vide Dte
letter no 76-01/2013-Wl/Sports dated 23.4.13 further communicated vide C.O letter no WLF/332-2/2013 dated 29.04.13
received from R.O letter no WLF/331-01/2012/TR dated 01.05.13 is furnished below for information and necessary
action.
The Nomination if any should reach this office on or before 08.05.2013
for onward transmission to C.O.If no report received from your end on the due date the report may be taken as
NIL and report furnished to C.O.
1.
The award will be Known as NATIONAL
CHILD AWARD FOR EXCEPTIONAL ACHIVEMENT
2. ELIGIBILITY : Children Between 4 to 15
Years who have shown in exceptional achievement in any field including
academics,arts and culture and Sports etc. will be considered for this
award.One Gold medal and 35 silver medals (one for each state/U.T) are to be
given annually.
3. NATURE OF
AWARD :
The award
for the child with exceptional achievement shall consists of
(A)
GOLD
MEDAL-01
(i)
Cash prize of Rs.20000/- (ii) Citation and Certificates and (iii)
Gold Medal.
(B)
Silver
medals-35
(i)
Award Money @Rs.10000 for each awardee (ii) Citation and
certificate for each awardee(iii) Silver medal for each Awardee
4.
SELECTION
COMMITTEE :
5. A National
selection committee out of the cases recommended by various bodies will make
the selection.
RECOMMENDING
AUTHORITY :
The application should be recommended by state/UT deptts,any Dept
of Gove of India/District authority,local self government,Experts in the field ,M.P,M.L.A
and reputed voluntary organizations.
6.CRITERIA FOR SELECTION :
(i)
The child is to be selected for the award should unusual talent
and exceptional achievement in any field including academics arts culture and
Sports etc.
(ii)
Age certificate (DOB) duly attested by a Gazetted Govt office may be attached.
(iii)
Tribute/Traits which are claimed to be possessed by the child
extraordinary or exceptional should be reported in the press, or have been
tested by experts in the field. It should also be possible to subject the claim
to an objective test.
7.DATE OF AWARD :
The award will be announced on 14th November each year
and will be givenaway in NEW DELHI on a date and time convenient to the
Minister for Women &Child Development.The child will receive the award
personally.The Ministry of Women &Child Development will pay the awardee
and his/her guardian/escort (Max-2)expenditure involved in travelling and daily
allowances as per Rules. Prescribed
Application is enclosed.
The contents
of above award should be brought to the notice of all concerned including those
on leave/Deputation etc.
Supdt of Post Offices
Pudukkottai Division
Thursday, April 25, 2013
Monday, April 22, 2013
Thursday, April 18, 2013
Dearness allowance for central govt employees hiked to 80%
The hike would be effective from January 1, 2013 and the employees and pensioners will be entitled to arrears.
The decision to raise the DA will impose an additional annual burden of Rs 8,629.20 crore on the exchequer, information and broadcasting minister Manish Tewari told reporters after the meeting of the Union Cabinet.
Taking into account the additional outgo for the January- March period, the total burden during the current financial year would be Rs 10,067 crore.
The government had hiked DA to 72 per cent in September last year. It had come into effect from July 1, 2012.
As per the practice, the DA is merged with basic pay when it breaches the 50 per cent cap. This helps employees get higher allowances as they are paid as proportion of the basic pay.
Source: http://timesofindia.indiatimes.com
Subscribe to:
Posts (Atom)